Posts

சிறுநீர்த் தொற்று சிறுநீரகத்துக்கு வேட்டு!

Image
       டாக்டர் கு. கணேசன்         சி றுநீரகத்துக்கு சிக்கலை உண்டாக்கும் பாதிப்புகளில் பிரதானமானது, சிறுநீர்த் தொற்று. இது, தொட்டில் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் பாட்டனார் வரை எல்லோரையும் பாதிக்கிறது.  உடலில் சிறுநீர் வரும் பாதையில் சிறுநீரகம், சிறுநீர் இறக்குக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர் வெளியேறும் வழி என நான்கு பகுதிகள் உண்டு. அந்த இடங்களில் பாக்டீரியா தாக்கும்போது சிறுநீர்த் தொற்று (Urinary infection) ஏற்படுகிறது.         உடலின் உள்ளிருந்து, வெளியிலிருந்து என இரண்டு வழிகளில் இது பெறப்படுகிறது. உடம்புக்குள் ‘உலா’ வரும் பாக்டீரியாக்கள் சிறுநீரகத்தைப் ‘பார்க்க’ வரும்போது அது ‘பிடித்துப்போய்’ அங்கேயே தங்கிவிடுவது முதல் வகை. அழையாத விருந்தாளி வீட்டுக்கு விசிட் செய்வதுபோல், சிறுநீர் வெளியேறும் துவாரம் வழியாக வெளியிலிருந்து பாக்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதைக்குள் நுழைவது இரண்டாவது வகை. இதுதான் பலருக்கும் ஏற்படும் பொதுவான வகை. ஆண்களைவிட பெண்களுக்கு இது அதிகம். எப்படி? பெண்களின் உடலமைப்பு அப்படி! பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறும் இடத்துக்கு அருகிலேயே ஆசனவாயும் இருக்கிறது. ஆசனவாய் என்

சிறுநீரகம் - உடலின் கழிவுத் தொழிற்சாலை!

Image
        டாக்டர் கு. கணேசன், ராஜபாளையம்.             நெஞ்சில் வலி வந்தால், “எதுக்கும் ஒரு இசிஜி எடுத்துக்கோ… மாரடைப்பு ஏதாவது இருந்துடப் போகுது” என அக்கறையோடு சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். வயிற்றில் வலி வந்தால், “எண்டோஸ்கோப்பி பார்த்துக்கொள்வது நல்லது… அல்சராக இருக்கும்” என்று யோசனை சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். இதுபோல் முதுகில், விலாவில் வலி வந்தால், “அது வாய்வாகத்தான் இருக்கும். பூண்டு சாப்பிடு. சரியாகிவிடும்” என்றுதான் நெருங்கியவர்கள் சொல்வார்களே தவிர, “வயிற்றை ஸ்கேன் எடுத்து சிறுநீரகம் (Kidney) சரியா இருக்கான்னு பார்த்துக்கோ..” என ஆத்ம நண்பர்கூட ஆலோசனை சொல்லமாட்டார். காரணம், நம் மக்களிடம் இதயம் மற்றும் இரைப்பையைத் தெரிந்த அளவுக்குச் சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. படித்த ஆண்களுக்கேகூட சிறுநீரகம் எங்கே இருக்கிறது என்கிற விவரம் தெரியாது! சிறுநீர் வெளியேறுகிற உறுப்பைச் சுற்றி இருக்கும் விரைகளையே (Testes) சிறுநீரகங்கள் என்று கருதுபவர்கள்தான் அதிகம்! இதயம் ஒரு பம்ப், மூளை ஒரு கம்ப்யூட்டர், நுரையீரல் ஒரு காற்று இயந்திரம் என்று வர்ணித்தால் சிறுநீரகம் ஒரு ஃபி

மூட்டுவலிக்கு முடிவு கட்டுவோம்!

Image
  டாக்டர் கு. கணேசன், ராஜபாளையம்     பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் நண்பரின் மனைவிக்கு நடுத்தர வயது. அவருக்கு வலது கால் வளைந்திருந்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு குடும்ப நிகழ்வில் அவரைச் சந்தித்தபோது, “நீங்கள் காலாகாலத்தில் எலும்பு டாக்டரைப் பார்த்து ஓர் ஆபரேஷன் செய்துகொண்டால் நல்லது” என்றேன்.  “காலில் தொந்தரவு எதுவும் இல்லாதபோது ஆபரேஷன் செய்துகொள்ளச் சொல்கிறீர்களே! நான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் கேலியாகவும் கேட்டார். அவருக்கு இருக்கிற பிரச்சினையைப் புரிய வைப்பதற்கு அன்றைக்கு அவர் வாய்ப்பு தரவில்லை. அப்புறம் நானும் அதை மறந்துவிட்டேன். ஆனால், நான்கு வருடங்களுக்குப் பிறகு, அதே முழங்கால் மூட்டில் வலி வந்து துடித்துக்கொண்டிருந்தவரை, அவரது கணவர் என்னிடம் சிகிச்சைக்கு அழைத்துவர, பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. “கால் உட்புறமாக வளைந்திருந்தால் மூட்டில் சமநிலை சிதையும். சீக்கிரத்தில் மூட்டு பாதிக்கப்படும். அது மூட்டு மாற்றுச் சிகிச்சைவரை கொண்டு செல்லும். அதைத் தடுக்க, மூட்டைச் சமநிலைக்குக் கொண்ட

மூட்டுப் பிரச்சினை அறிவது எப்படி?

Image
    டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.   மூட்டுவலியில் பல தினுசு உண்டு. பாதிக்கப்படும் திசுவுக்கு எது எதிரியாகிறதோ, அதைப் பொறுத்து அதன் பெயர் மாறும். வயதானதும் எலும்புகளில் அழற்சி உண்டாகி உரசத்தொடங்கும்போது ஏற்படும் மூட்டுவலிக்கு ‘ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்’ (Osteo arthritis) என்று பெயர். உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது வரும் மூட்டுவலி ‘கவுட் ஆர்த்தரைடிஸ்’ (Gout arthritis). அந்நிய உணவுகளின் ஆதிக்கம் பரவலானதும் நம்மை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்ட மூட்டுவலி இது. இது எதனால் வருகிறது? நாம் சாப்பிடும் அதிகப்படியான இறைச்சி அயிட்டங்கள்தான் இந்த நோயை வளர்க்கும் உரங்கள். இவற்றிலுள்ள பியூரின் சத்து செரிக்கப்படும்போது யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இந்தக் கழிவுப்பொருள் சிறுநீரில் வெளியேறுவது வழக்கம். சமயங்களில், சில நொதிகள் சிதைவதால் இது அதிகமாகச் சுரந்துவிடும். இப்படியும் இருக்கலாம்….. சிறுநீரகப் பாதிப்பின்போது சிறுநீரகம் இதை வெளியேற்ற சண்டித்தனம் செய்யும். இதனால், இந்த அமிலம் ரத்தத்தில் தேங்கும். இது கொஞ்ச நாள் உடலுக்குள் ஊர்வலம் போகும். ஒரு கட்டத்தில் அது போரடித்துவிடும். நிரந்தரமாக ‘கேம்ப்’ போட இடம்

வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியா வருமா?

Image
  இன்று (19.11.2020) வந்துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தலையங்கம் பக்கத்தில் என் கட்டுரை: டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம். உலக அளவில் கரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியைக் கொண்டுவருவதில் வளர்ந்த நாடுகள் போட்டி போடுகின்றன. தற்சமயம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், ஜைகோவ்-டி ஆகிய இரண்டு தடுப்பூசிகளைச் சேர்த்து 11 ‘சோதனைத் தடுப்பூசிகள்’ 3-ம் கட்ட ஆய்வில் உள்ளன. இந்தியத் தடுப்பூசிகளுக்கு 50% பலன் கிடைத்தாலே போதும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ள நிலையில்,  அமெரிக்க கரோனா தடுப்பூசி 90% பலன் தருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.   அதைத்   தொடர்ந்து    ரஷ்யாவின்  ‘ ஸ்புட்னிக் - வி ’  தடுப்பூசி  92%  பலன்   தருவதாக   அந்த   நாடு   அறிவித்தது .  இந்த   வாரம் ,  அமெரிக்காவின்   மாடர்னா   நிறுவனம்   தயாரித்துள்ள  ‘ எம்ஆர்என்ஏ -1273’ (mRNA-1273)  தடுப்பூசி  94.5%  செயல்திறன்   கொண்டுள்ளதாகத்   தெரிவித்திருக்கிறது.   இந்தச் சூழலில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ‘வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியத் தடுப்பூசிகளைவிடத் தர

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

Image
                             டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.     இந்தியா வில் தொற்றாநோய்க் கூட்டத்தில் இணைந்துள்ள மற்றொ ரு நோய், மூட்டுவலி. “உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல… எழுந்தா உட்கார முடியல…சப்பணம் போடமுடியல… மாடிப்படியில் ஏற முடியல… மூட்டுவலி ஆளைக் கொல்லுது” என்று வேதனையுடன் முணுமுணுப்போர் முப்பதிலிருந்து நாற்பது கோடிப் பேர் . இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்களிடம்தான் முணுமுணுப்பு அதிகம். அதிலும் நம் தாத்தா காலத்தில் 60 வயதில் தொடங்கிய மூட்டுவலி தற்போது 30 வயதில் தொல்லை செய்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்; நவீன வாழ்வியல் தந்திருக்கும் ஓர் அச்சம் என்றும் இதைச் சொல்லலாம்.      மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான். என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பொதுவாக ‘மூட்டுவலி’ (Osteoarthritis) என்கிறோம். காலில் உள்ள முக்கியமான ஜங்ஷன் முழங்கால் மூட்டு. நடக்கும்போது, ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது, உட்காரும்போது, எழுந்திருக்கும்போது, நடனம் ஆடும்போது என சகல அசைவுகளின்போதும் உடல் எடையைத் தாங்கும் முதன்மையான மூட்டு இது. மற்ற மூட்டுகளோடு ஒப்பிட